பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட கருணா தோல்வியடைந்தார்.
இந்நிலையிலேயே பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான பிரத்தியேக ஒருங்கிணைப்பாளராக கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு